தமிழ்த் தேசியவாத அரசியலின் எதிர்காலம் ‘ நூல்வெளியீடு
___________________________
பத்திரிகையாளர் வீரகத்தி தனபாலசிங்கம் எழுதிய ‘ தமிழ்த் தேசியவாத அரசியலின் எதிர்காலம் ‘ நூல் வெளியீட்டு நிகழ்வு கொழும்பு தமிழ்ச் சங்கத்தின் விநோதன் மண்டபத்தில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (19/9) மாலை 5 மணிக்கு நடைபெறவிருக்கிறது.
எழுத்தாளர் வசந்தி தயாபரன் தலைமையில் நடைபெறும் இந்த நிகழ்வில் வெளியீட்டுரையை எழுத்தாளர் வி.ரி. இளங்கோவனும் கருத்துரைகளை தகவல் அறியும் உரிமை ஆணைக்குழு உறுப்பினர் ஏ.எம். ந.ஹியா, கிழக்கு பல்கலைக்கழக நுண்கலைத்துறை பேராசிரியர் எஸ்.ஜெய்சங்கர், சமூக அரசியல் செயற்பாடடாளர்கள் தெ..மதுசூதனன், யதீந்திரா ஆகியோரும் நிகழ்ந்துவர். இந்த நூல் மார்க்சிய கற்கைகளுக்கான சண்முகதாசன் நிலையத்தின் வெளியீடாகும்.
____________________

